திருவிழாவின் போது சப்பரங்கள் இழுப்பார்கள் முன்பெல்லாம் உப்பு மிளகு சப்பரத்தின் மீது போடுவார்கள் ஆனால் இப்போது தடை செய்துவிட்டார்கள் விழாவின் போது ஊர் மக்கள் அணைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடுவார்கள் .. யாருக்காவது பாலுண்ணி இருந்தால் திருவிழாவின் போது சப்பரத்தில் உப்பு மிளகு போட்டால் சரியாகும் என்று பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் இந்த கோவில் அமைப்பு வியக்கும் வகையில் அமைந்துள்ளது பெரிய மைதானம் கோவில் முன்பு இங்கே பல்வேறு நிகழ்சிகள் நடத்துவார்கள் திருவிழாவின் போது விளையாட்டு போட்டிகளும் நடத்தி இன்புற செய்வார்கள் இந்த ஆலயத்தினுள் இருக்கும் சிற்ப்பங்கள் வியக்கும் வகையில் அமைந்துள்ளது உள்ளே
சிலுவையில் தொங்குவது போல் உள்ள இயேசு கிறிஸ்துவின் உருவ அமைப்பு எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் உள்ளது.... இந்த வளாகத்திலே குழந்தை இயேசு பாலர் பள்ளி உள்ளது அங்கே சிறுவர்களுக்கு விளயாட்டுடன் கல்வியை போதித்து வருகிறார்கள் இன்னும் நிறைய இருக்கு இருப்பினும் என் கீ போர்டு சப்போர்ட் பண்ண மட்டைக்கு என் கை பட்டே வலியால் துடிக்குது அதனால சற்று ஒய்வு கொடுக்க ஆசைப்பட்டு இந்த பதிவை முடிக்கிறேன் என்றும் அன்புடன் ஷாஜஹான் சார்லஸ்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக