பக்கங்கள்

புதன், 18 செப்டம்பர், 2013

Karuvantha (கருவந்தா மாநகர்)

கருவந்தா மாநகர்
கருவந்தா பல அடுக்கு மாடிவீடுகளை கொண்டுள்ள ஊர்
 இங்கே பல தரப்பட்ட மக்கள் ஒற்றுமையாக வாழும் அழகான ஊர் கருவந்தா மாநகரில் சுமார் 5 (50) வார்டுகள் இருக்கிறது காலையில் எழுந்து பள்ளிக்கு செல்ல பேரூந்து நிலையத்தில் காத்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது பயப்படாதிங்க அவ்ளோ பேரும் விடுதியில் தங்கி படிக்க போய்ராங்க..காலையில் சுமார் 8:30 மணிமுதல் 10 மணிவரை ஆட்டோக்களும் டாடா சுமோக்களும் ஆம்னிகளும் டாடா மேஜிக்குகளும் அணிவகுத்து செல்லும்  ஆம் நமது மாநகர ஆண்மக்கள் வேலைக்கு செல்வார்கள் இந்த மாநகரில் அதிகமான மக்கள் விவசாயத்தை செய்து வருகிறார்கள் கடவுள் மழைக்கு விடுமுறை விடும் போது விவசாயிகள் மனம் தளறாது சாலை பணியாளர் வேலைக்கு சென்றுவிடுவார்கள் சில பேர் லைன் தோண்ட சென்று விடுவார்கள்... நமது மாநகரில் இப்போது மிகவும் பிரபல்யமாக இருப்பது கொத்தனார் தொழில் , ஜேசிபி ஆபரேட்டர் , டிரைவர் இளைஞர்கள் இப்போது இந்த மூண்று தொழிலில் தான் ஆர்வம் காட்டுகின்றனர் ... கருவந்தா மாநகரில் பிறந்து வளர்ந்து தன் படிப்பை முடித்து வேலைக்காக வெளியூர்,வெளிமாநிலம்,வெளிநாடு, வெளி கண்டம், வெளி உலகம் என்று பல்வேறு இடங்களில் பணிபுரிகிறார்கள் அவர்களின் திறமையையும் ஆற்றலையும் வியந்து வருகிறது இந்த தொழில்நுட்ப உலகம் ...
ஆண்கள் மட்டுமல்லாது பெண்கள் அணைவரும் பீடி சுற்றும் தொழிலில் இடுபட்டு வருகிறார்கள்... மாநகர மாணவர்கள் பல பேர் படிப்பிலும் , தொழிலிலும் சாதனை படைத்து வருகிறார்கள்...மாநகரின் அமைப்பும் அம்சமும் கன கச்சிதமாக கண்ணுக்கு அழகாக அமைந்துள்ளது... இறைவனின் இறக்கம் இருந்தால் எப்போதும் பசுமையாக காட்சியளிக்க மாநகரால் முடியும் அது விரைவில் நடக்கும் ...
என்றும் அன்புடன் ஷாஜஹான் சார்லஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக