புதன், 18 செப்டம்பர், 2013
பரிசுத்த மத்தேயு ஆலயம்,கருவந்தா
நீங்கள் பார்த்து கொண்டிருப்பது பழைய ஆலயம் தான் ஆனால் எத்தனை ஆண்டுகள் சென்றாலும் யாராலும் மறக்க இயலாது இப்போது புதிய ஆலயத்தை கட்டி இரண்டு ஆண்டுகள் பிரதிஷ்ட்டை முடிந்த நிலையில் வானுயர்ந்து நிற்கிறது இந்த ஆலய கோபுரம் சுமார் ஒரு கோடி செலவில் இந்த
புதிய ஆலயத்தை கட்டி எழுப்பி உள்ளார்கள் ஊரின் உள்ளே வருவதற்கு முன்னே அதோ தெரியுது பார் கோபுரம் அது தான் எங்க ஊர் என்று பெருமைப்படும் வகையில் அமைந்துள்ளது இந்த ஆலயத்தினுள் பால்கனி வைத்து மிக பிரமாண்டமாக வடிவமைத்துள்ளார்கள் இதன் உள்ளே சென்றதும்
"பயப்படாதே உன் வேண்டுதல் கேட்க்கப்பட்டது " என்ற வசனம் வரும் எல்லோரையும் ஆறுதல் அடைய செய்யும் விதத்தில் இருக்கிறது . ஊரில் மின் தடை ஏற்படும் நேரங்களில் இதன் கோபுரத்தில் அமைந்துள்ள விளக்குகள் ஊரையே இருளில் இருந்து மீட்ப்பது போல் காட்சி அளிக்கிறது இதன் கோபுர உச்சியில் நின்று ஊரை படம் பிடிப்பதும் பார்ப்பதும் மனதுக்கு மகிழ்ச்சியையும் இதயத்துக்கு இனிமையான உணர்வையும் கொண்டு வரும். இதன் பிரதிஷ்ட்டை மே மாதம் நடைபெறும் புதுவருட பிறப்பு , கிறிஸ்மஸ் போன்ற விழாகாலங்களில் மிகவும் அழகான முறையில் கொண்டாட படும் . அந்த பழைய ஆலயம் இடிக்கும் போது அதன் கோபுரம் சாயும் போது அருகில் இருந்து அதனை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அது இன்னும் என் கண்களை உருக்குகிறது அப்படி நடந்தது அதனை படமாக எடுத்து வைத்திருந்தேன் ஆனால் தொழில்னுட்ப கோளாறு காரணமாக அழிந்து விட்டது... போதும்னு நினைக்கிறேன் அய்யோ மறந்துட்டேன் என்றும் அன்புடன் ஷாஜஹான் சார்லஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
.jpg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக