பக்கங்கள்

புதன், 18 செப்டம்பர், 2013

முதல் பதிவு



முதல் பதிவு



கருவந்தா மாநகருக்கென்று தனியாக ஒரு வலைப்பக்கத்தை உருவாக்குவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது முதல் பதிவாக எதை பற்றி எழுவது என்று ஆழ்ந்து யோசிக்கும் போது என் கபாலத்தில் கணீர் என்று நினைவுக்கு வந்தது தெய்வங்கள் தான் ஆம் அவர்கள் நம்மை படைத்து பராமரித்து வருகிறார்கள் ஆகவே இந்த பதிவில் அவர்களை பற்றியும் அவர்கள் இருக்கும் புனித ஸ்தலங்களை பற்றியும் எழுதுகிறேன் .........

இது தான் கருவந்தா வின் அடையாளமாக இருந்தது இப்போது புதிய ஆலயத்தை கட்டிவிட்டார்கள் இந்த ஆலயத்தின் பெயர் பரிசுத்த மத்தேயு ஆலயம் .. இந்த ஆலயம் ஊத்துமலையை சேகரமாக கொண்டு செயல் பட்டு வருகிறது..
இதனை பற்றி வரும் பதிவுகளில் விரிவாக காண்போம்..

அடுத்து வினைகளை தீர்க்கும் விநாயகர் கருவந்தா மாநகரில் எண்ணற்ற விநாயகர் கோவில்கள் இருந்தாலும் இந்த விநாயகருக்கு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு மேலே கூறியது போல தான் இதனை பற்றி விரிவாக வரும் பதிவுகளில் காண்போம்...


இது காளியம்மன் முத்தாரம்மன் திருக்கோவில் இந்த கோவில் மேலே உள்ள விநாயகர் கோவிலுக்கு அருகில் உள்ளது இந்த ஆலயத்தில் காளியம்மனும் முத்தாரம்மனும் வீற்றிருந்து ஆசிகளை வழங்கி கொண்டிருக்கிறார்கள்

காளியம்மன் திருக்கோவில் இதனை புதுக்கோவில் கரடி கோவில்(கரையடி ) என்ற புனை பெயர்களால் அழைப்பார்கள்
இந்த கோவிலில் புதுப்பிக்கும் பணி நடை பெறுகிறது......

ஸ்ரீ சுடலை மாடசாமி கோவில் இதனை பெரிய கோவில் என்று புனை பெயருடன் அழைப்பார்கள்





நாகமுடி சாஸ்த்தா கோவில் இது ஊருக்கு தென் புறம் வயக்காட்டு பக்கம் அமைந்துள்ளது



மேலும் பல கோவில்கள் உள்ளன இருப்பினும் என்னிடம் புகைப்படம் இல்லை உங்களிடம் இருந்தால் அனுப்பவும் பதிவிடுகிறேன்.....
அன்புடன் ஷாஜஹான் சார்லஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக