பக்கங்கள்

வியாழன், 19 செப்டம்பர், 2013

தொலை தொடர்பு



தொலை தொடர்பு
நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருப்பது இந்த தொலை தொடர்பு என்றால் மறுக்க முடியாத விடயமாகும் கருவந்தா மாநகரிலும் இந்த தொலை தொடர்பு பரந்து விரிந்து காணப்படுகிறது. நமது மாநகரில் வசிக்கும் 15 வயதுக்கு மேற்ப்பட்ட அனைவரிடமும் கைப்பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது தொலை தொடர்பை வழங்கும் நோக்கில் அலை பேசி டவர்கள் வானுயர்ந்து ஒரே இடத்தில் அமைந்துள்ளது . இங்கே தபால் நிலையமும் உள்ளது . கருவந்தா மாநகரில் மூண்று டவர்கள் உள்ளது ஏர்செல்,வோடாபோன், பி.எஸ்.என்.எல் இதில் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்டு ஏர்செல் நிறுவனமும் அதனை தொடர்ந்து வோடாபோன் நிறுவனமும் சிறப்பான சேவையை பொது மக்களுக்கு வழங்கி வருகிறது.. கருவந்தா மாநகர் தெங்காசி பகுதிக்கு உட்ப்பட்டு இருப்பதால் இதன் தொலை பேசி கோடு எண்கள் 04633 என்று உள்ளது
மேலும் ஊத்துமலையை மையமாக கொண்டு செயல் படுவதால் தொலைப்பேசி எண்ணின் முதல் மூன்று எண்கள் 247 என்று தொடங்கும்  இங்கே அலை கற்றைகள் மூலம் இயங்கும் வயர்லெஸ் போங்கள் பெரும்பான்மையான இல்லங்களில் விருந்தாளியாக வந்து குடும்பத்துடன் இணைந்து பங்களித்து வருகிறது சில தொலைபேசி எண்கள் 291 என்ற எண்ணின் தொடக்கதோடும் சில தொலைபேசி எண்கள் 294 என்ற ஆரம்பத்தை கொண்டும் செயல்பட்டு வருகிறது..........   தொடர்ந்து இணைந்திருங்கள் இந்த வலை பூவுடன் உங்கள் பெயரை மறாவாது பதிவு செய்து விட்டு செல்லுங்கள் ... என்றும் அன்புடன் ஷாஜஹான் சார்லஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக